கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் சார்பாக வரும் பிப்ரவரி 4ம் மற்றும் 5ம் தேதிகளில் பாஸ்போர்ட் மேளா சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து பயனடையலாம்.
இந்த முகாமானது பாஸ்போர்ட் சேவா கேந்தரா 25 ஏஜிடி பிசினஸ் பார்க்கில் (லோட்டஸ் கண் மருத்துவமனை அருகில்) நடைபெறவுள்ளது.
இம்முகாமில், சாதாரண பாஸ்போர்ட் வழங்குவதற்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்காக இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், 4 மற்றும் 5ம் தேதிகளில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்தராவில் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.
இதற்கான அழைப்பு ஜனவரி 25ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், தட்கல் மற்றும் போலிஸ் க்ளியரன்ஸ் சான்றிதழ்கள் இந்த முகாமில் பெறப்பட மாட்டாது. அன்றைய தினத்தில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.