பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 4ம் தேதி "பாஸ்போர்ட் மேளா " சிறப்பு முகாம் துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் சார்பாக வரும் பிப்ரவரி 4ம் மற்றும் 5ம் தேதிகளில் பாஸ்போர்ட் மேளா சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்த முகாமானது பாஸ்போர்ட் சேவா கேந்தரா 25 ஏஜிடி பிசினஸ் பார்க்கில் (லோட்டஸ் கண் மருத்துவமனை அருகில்) நடைபெறவுள்ளது. 

இம்முகாமில், சாதாரண பாஸ்போர்ட் வழங்குவதற்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்காக இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், 4 மற்றும் 5ம் தேதிகளில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்தராவில் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

இதற்கான அழைப்பு ஜனவரி 25ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், தட்கல் மற்றும் போலிஸ் க்ளியரன்ஸ் சான்றிதழ்கள் இந்த முகாமில் பெறப்பட மாட்டாது. அன்றைய தினத்தில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...